வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்
வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்... கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம்...
வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம் !
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா,
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே....
நம்ப முடியாதா, நம்மால் முடியாதா,
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே...
யாரும் இல்லை தடை போட, உன்னை மெல்ல எடை போட,
நம்பிக்கையில் நடை போட சம்மதமே...
என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு..
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே..
வந்தால் அலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்..
மீண்டும் மீண்டும் எழுவோம்.. எழுவோம்
இன்னும் இன்னும் இறுக, உள்ளே உயிரும் உருக, இளமை படையே வருக.. எழுக
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா,
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே....
நம்ப முடியாதா, நம்மால் முடியாதா,
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே...